19 நவம்பர், 2011

நெல்லியடியில் கசிப்பு காச்சிய 60 வயது பெண் கைது.



வடமராட்சி நெல்லியடி முனைத் தோட்டத்தில் வீடோன்றில் கசிப்புக் காய்ச்சிய 60 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் சுற்றுவளைப்பு மேற் கொண்ட போது சந்தேக நபரான பெண்மணி கசிப்பு வடித்துக்கொண்டிருந்ததாகவும் , அங்கிருந்து வடித்தலுக்குப் பயன்படுத்தக் கூடிய உபகரணங்களும் நிரப்பப்பட்ட கசிப்பு போத்தல்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கிறனர்.

விசாரணைகள் முடிவில் சட்டவிரோத சாரயம் காச்சினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த பெண் பருத்திதுறை மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக